அரிசிக்கு வரி விதிப்பு: காவிரி டெல்டா பகுதிகளில் கடையடைப்பு
தஞ்சாவூர்:
அரிசிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை)கடையடைப்புப் போராட்டம் நடக்கிறது.
கடந்த வார தமிழக பட்ஜெட்டின்போது, அரிசி உள்ளிட்ட சில உணவுப் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டது.
இதற்கு திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழகத்திலேயே தற்போதையஅதிமுக ஆட்சியின்போது மட்டுமே அரிசிக்கு வரி போடப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதிகிண்டலடித்தார்.
வியாபாரிகளும் விவசாயிகளும் கூட அரிசிக்கு வரி விதிக்கப்பட்டிருப்பதைக் கடுமையாகக் கண்டித்தன.
இந்நிலையில் இந்த வரி விதிப்புக்களை எதிர்த்து காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம்மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கடையடைப்பு நடந்து வருகிறது.
இந்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் வியாபாரிகளும் இந்தக் கடையடைப்பில் கலந்துகொண்டனர்.
கடையடைப்பு தவிர மாவட்டக் கலெக்டர் அலுவலகங்கள் முன்பாக வியாபாரிகள் சங்கத்தின் சார்பில்ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.












Click it and Unblock the Notifications