இந்திய-இலங்கை தமிழர்களிடையே தொப்புள் கொடி உறவு: வைகோ
ஈரோடு:
இந்திய-இலங்கைத் தமிழர்களிடையே இருப்பது தொப்புள் கொடி உறவு, அதை யாராலும் பிரிக்கவே முடியாதுஎன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
ஈரோடு அருகே பவானியில் நடந்த மதிமுக பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து உண்டு. இப்பிரச்சனையில் இனியும் நாம்தொடர்ந்து ஒரே அணுகுமுறையைப் பின்பற்ற முடியாது. நாங்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறோம்.
கடந்த 30 ஆண்டுக் காலத்தில் இலங்கையில் நடந்த வன்முறைகளுக்கு அளவே இல்லை. அந்தத் தமிழர்கள் பட்டதுன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் நம் இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கும் இடையே இருப்பது தொப்புள்கொடி உறவாகும். இதை யாராலும் பிரிக்க முடியாது.
தற்போது இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பிரதமரான பிறகு அங்கு அமைதிக்கான சூழ்நிலைஉருவாகியுள்ளது.
புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, இந்தியாவிலேயே அமைதிப்பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள உல்பா தீவிரவாத இயக்கமும் தடை செய்யப்பட்ட இயக்கம்தான். ஆனால் நோய் வாய்ப்பட்டநிலையில் உள்ள தன் தந்தையைப் பார்ப்பதற்காக அந்த இயக்கத்தின் தலைவன் வருவது இங்குஅனுமதிக்கப்பட்டுள்ளது.
அதனால் விடுதலைப்புலிகள் இந்தியாவில் தங்கி பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தவிதமான தவறும் இல்லைஎன்று வைகோ பேசினார்.












Click it and Unblock the Notifications