சென்னையில் ரூ.1.5 லட்சம் மதிப்பு திருட்டு விசிடிக்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை பர்மா பஜாரில் நேற்று (திங்கள்கிழமை) இரவு நடந்த திடீர் சோதனையில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ளவிசிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை பர்மாபஜார் பகுதியில் உள்ள கடைகளில் திங்கள்கிழமை இரவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின்போது அங்குள்ள கடையில் உரிமம் பெறாத விசிடிக்கள், புதிய தமிழ்பட கேசட்டுக்கள்,ஆபாச கேசட்டுக்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
மொத்தம் சுமார் 1,200 கேசட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சம் என்றுபோலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அப்துல் சலாம், பூவண்ணன் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து, விசாரித்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications