மே 1 முதல் புலிகள் மீதான தடை நீக்கம்?
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை வரும் மே மாதம் 1ம் தேதி முதல் நீக்கப்பட்டுவிடும் என இலங்கைஅரசு அறிவித்துள்ளது.
1998ம் ஆண்டில் இந்தத் தடை விதிக்கப்பட்டது. தங்கள் மீதான தடையை விலக்கினால் தான் இலங்கை அரசுடன்பேச்சுவார்த்தைக்கே முன் வருவோம் என நார்வே குழுவினரிடம் புலிகள் கூறிவிட்டனர்.
தடையை விலக்க முடியாது என்று கூறி வந்த அரசு இப்போது தான் முதன்முறையாக தடையை விலக்குவதாகஅறிவித்துள்ளது.
தாய்லாந்தில் புலிகள்-இலங்கை அரசுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாக தடையைநீக்கிவிட அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications