"பார்" வைக்க எதிர்ப்பு... அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுக் கடைகளில் "பார்" வைப்பது தொடர்பாக தமிழக அரசை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள மனு குறித்து விளக்கம்அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவுத் தலைவரான சூரியப் பிரகாசம் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் இந்தமனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் இதுகுறித்து இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிநீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications