கூத்தாண்டவர் கோவில் அலிகள் திருவிழா தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் அலிகள் திருவிழா கொடியேற்றத்துடன்தொடங்கியது.
கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் அலிகள் திருவிழாநடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வரும் 26ம் தேதி வரை 18 நாட்கள் இந்த அலிகளின் திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான "சாமி கண் திறத்தல்" வரும் 23ம் தேதி இரவு நடைபெறவுள்ளது.இந்நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து நூற்றுக்கணக்கான அலிகள் வந்து கலந்து கொள்வார்கள்.
அன்று இரவு அலிகளுக்குத் தாலி கட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது. கோவில் பூசாரி அலிகளுக்குத் தாலி கட்டுவார்.அதற்கு மறுநாள் காலையில் தேரோட்டம் நடைபெறும்.












Click it and Unblock the Notifications