""ஜெயலலிதாவும் மனுஷிதானே"": காளிமுத்து
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா உரிமை மீறல் பிரச்சனை எழுப்பும் வகையில் எதையும் தவறாகப் பேசவில்லை என்றுசபாநாயகர் காளிமுத்து இன்று (வியாழக்கிழமை) சட்டசபையில் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை காவிரி விவகாரத்தில் தவறான தகவல் கொடுத்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் நிதிஅமைச்சர் பொன்னையனுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வருவதற்கான கோரிக்கையை சபாநாயகர்காளிமுத்துவிடம் திமுக எம்.எல்.ஏக்கள் வழங்கினர்.
அவையின் பழைய கோப்புகளைப் படித்துவிட்டுத்தான் இதுகுறித்து முடிவு செய்ய முடியும் என்று காளிமுத்துகூறியிருந்தார்.
அதன்படி இன்று சட்டசபையில் காளிமுத்து பேசுகையில்,
ஒருவர் வேண்டுமென்றே தவறாக எதையாவது பேசினால்தான் அதுகுறித்து உரிமைப் பிரச்சனை எழுப்ப முடியும்.
ஆனால் ஜெயலலிதா தெரியாமல்தான் காவிரி விவகாரத்தில் கருணாநிதி குறித்துப் பேசிவிட்டார். வாய் தவறிபேசிவிட்டேன் என்று அவரே மறுநாள் வருத்தமும் தெரிவித்துள்ளார்.
தவறுகள் ஏற்படுவது மனித இயல்பு. ஜெயலலிதாவும் ஒரு மனுஷிதானே. எனவே ஜெயலலிதா உரிமைப் பிரச்சனைஎதுவும் மீறப்படவில்லை என்றார் காளிமுத்து.
காளிமுத்துவின் இந்த அறிவிப்பைக் கண்டித்து இன்று திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சர்க்காரியா கமிஷன் விவகாரத்தில் இருந்து தப்புவதற்காகத் தான் காவிரி தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தில்இருந்து கருணாநிதி வாபஸ் பெற்றார் என்று குற்றம் சாட்டிய ஜெயலலிதா, அந்தக் குற்றச்சாட்டைத் திரும்பப்பெறுவதாகவும் வாய் தவறி அப்படிப் பேசிவிட்டதாகவும் நேற்று கூறியிருந்தார்.
ஆனால், தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டைக் கூறிய ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுகருணாநிதியும் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications