""ராஜிவ் கொலை ஒரு துயரமான சம்பவம்""

Subscribe to Oneindia Tamil

கிளிநொச்சி:

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டது ஒரு துயரமான சம்பவம் என்றுவிடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறினார்.

சர்வதேசப் பத்திரிக்கை நிருபர்களை நேற்று கிளிநொச்சியில் சந்தித்த பிரபாகரனிடம் ராஜிவ் கொலை குறித்துகேட்டபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க இந்தக் கொலைச் சம்பவம் இடையூறாக இருக்காதா என்று ஒரு நிருபர்கேட்டதற்கு, இது தொடர்பான வழக்கு இன்னும் விசாரணையில் இருக்கும் வரையில் நாங்கள் எந்தக் கருத்தையும்கூற விரும்பவில்லை என்றார் பிரபாகரன்.

"ராஜிவ் கொலையில் நீங்கள் சம்பந்தப்பட்டுள்ளீர்களா? உங்களைப் பிடித்து ஒப்படைக்கும்படி சர்வதேசப்போலீசான "இன்டர்போல்" கூட கேட்கப்பட்டுள்ளதே?" என்று மற்றொரு நிருபர் கேட்டார்.

இது 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு துயரமான சம்பவம். எனவே இதுபற்றி கருத்து தெரிவிக்கவிரும்பவில்லை.

"இந்தப் படுகொலை காரணமாகத்தான் இலங்கை இனப்பிரச்சனைக்கான அமைதிப் பேச்சை இந்தியாவில் நடத்தஅனுமதி கிடைக்கவில்லையா?" என்று மற்றொரு நிருபர் விடாப்பிடியாகக் கேட்டார்.

"தற்போது அமைதி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நேரத்தில் பழைய பிரச்சனைகளைத் தோண்டிக்கொண்டிருக்க வேண்டாம்" என்றார் புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம்.

அதன் பிறகு இந்தப் பிரச்சனை குறித்து புலிகள் தலைவர் ஏதும் பேசவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+