பாலசிங்கத்தை இந்தியாவுக்குள் அனுமதிக்கலாம்: வைகோ
சென்னை:
விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் சிகிச்சை பெறுவதற்காக அவரைஇந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரான வைகோ மத்திய அரசுக்குக்கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:
புலிகளின் பிரச்சனைக்கு முடிவு ஏற்படும் வகையில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் பேச்சுவார்த்தை மூலம் அமைதிக்கு வழிகாணப் புறப்பட்டிருக்கும் போக்கு வரவேற்கத்தக்கது.
இந்தப் பேச்சுவார்த்தைக்காக அடிக்கடி தாய்லாந்து சென்று வரவேண்டிய நிலையில் பாலசிங்கம் இருப்பதால், அவர்அடிக்கடி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
எனவே அவரை இந்தியாவிலேயே தங்க அனுமதித்தால் அவர் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு வசதியாகஇருக்கும். எனவே பாலசிங்கம் இந்தியாவிலேயே தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றுவைகோ கூறினார்.
இதுகுறித்து பிரதமர் வாஜ்பாயுடனும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடமும் தான் பேசியுள்ளதாகவும்வைகோ தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications