தடைகளை நீக்கினால்தான் அமைதிப் பேச்சு
Subscribe to Oneindia Tamil
கிளிநொச்சி:
தங்கள் மீதான தடைகளை இலங்கை உள்ளிட்ட பல நாடுகளும் நீக்கினால்தான் அமைதிப் பேச்சுவார்த்தைநடத்துவோம் என்று விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறினார்.
எங்களுடைய புலிகள் இயக்கத்தை இலங்கை அரசு கடந்த 1998ம் ஆண்டு தடை செய்தது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன் எங்களுடைய முக்கியமான கோரிக்கையே இந்தத் தடையை விலக்க வேண்டும்என்பதுதான்.
எங்கள் மீதான தடையை முதலில் இலங்கை அரசு நீக்கினால்தான், மற்ற நாடுகளும் தடை செய்வது குறித்துபரிசீலனை செய்யும்.
எனவே புலிகள் மீதான தடையை நீக்கினால்தான் அமைதிப் பேச்சுவார்த்தையில் நாங்கள் பங்கு கொள்வோம்என்றார் பிரபாகரன்.
இலங்கை அரசுக்கு இணையான கெளரவத்தோடு நாங்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க நினைக்கிறோம்என்றார் பாலசிங்கம்.












Click it and Unblock the Notifications