இந்தியாதான் எங்கள் தந்தை நாடு
கிளிநொச்சி:
இலங்கை இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக விரைவில் நடக்கவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில்இந்தியாவின் உதவி இல்லாமல் நிரந்தரத் தீர்வு கிடைக்காது என்று என்று விடுதலைப்புலிகளின் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தைக்கான தளமாக நாங்கள் இந்தியாவைக் கோரினோம். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை.
லண்டனிலிருந்து இந்தியா வந்து போகும் எங்களுடைய அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் மருத்துவவசதிகளை எளிதாகப் பெறுவதற்காக இந்தியா வழியாக, முக்கியமாக சென்னை வழியாக இலங்கை வருவதற்கானஅனுமதியை மட்டுமே இப்போது கோரியுள்ளோம்.
இந்திய அரசு இன்னும் ஒரு வாரத்திற்குள் இதற்கான பதிலை அனுப்பும் என்று நினைக்கிறோம்.
இந்தியாவின் அனுதாபம் மற்றும் உதவி இல்லாமல் இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படாது என்று நாங்கள்உறுதியாக நம்புகிறோம்.
இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. அந்நாட்டுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் நாங்கள் நிறையகஷ்டங்களை அனுபவித்து விட்டோம்.
இலங்கை எங்கள் தாய் நாடு என்றால், இந்தியாதான் எங்களுடைய தந்தை நாடு. அதனுடன் புதிய நட்பு மற்றும்ஆழமான உறவு வேண்டும் என்று எங்களுடைய விடுதலைப்புலிகள் இயக்கம் விரும்புகிறது.
இந்திய அமைதிப் படையினர் இங்குள்ள தமிழ் மக்களுக்குப் பல கொடுமைகளை அளித்தாலும், எங்கள் மக்கள்இன்னும் இந்தியாவை அதிகமாகவே நேசிக்கிறார்கள். மரியாதை செலுத்துகிறார்கள்.
பழையதை மறப்போம், புதியதை நினைப்போம் என்று பிரபாகரன் கூறினார்.












Click it and Unblock the Notifications