பிரபாகரனைப் பிடிக்க த.மா.கா. கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க நடவடிக்கைஎடுக்கப்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

அக் கட்சியின் எம்.எல்.ஏவான சி. ஞானசேகரன் தமிழக சட்டசபையில் இன்று பேசியதாவது:

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான பிரபாகரனை கடந்த 11ஆண்டுகளாக நாம் தேடி வருகிறோம்.

இந்த 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபாகரன் நேற்று இலங்கையின் கிளிநொச்சியில் சர்வதேசப்பத்திரிக்கை நிருபர்கள் மத்தியில் தோன்றினார்.

அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மத்திய அரசும்தமிழக அரசும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஞானசேகரன் கூறினார்.

இதுகுறித்து தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று சபாநாயகர் காளிமுத்து கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+