பிரபாகரன் சரணடைய வேண்டும்: இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான விடுதலைப்புலிகளின் தலைவரானவேலுப்பிள்ளை பிரபாகரன் தானாக முன்வந்து சரணடைந்து, வழக்கைச் சந்திக்க வேண்டும் என்று தமிழககாங்கிரஸ் தலைவரான இளங்கோவன் இன்று (வியாழக்கிழமை) கூறினார்.

கோயம்புத்தூரில் இன்று நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:

பிரபாகரனை இந்தியாவிற்குக் கொண்டு வந்து, அவரைத் தண்டிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும்மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

அதற்கு முன் பிரபாகரனே தானாக வந்து சரண்டராகி, ராஜிவ் காந்தி கொலை வழக்கை நேரடியாகச் சந்திக்கவேண்டும்.

சர்வதேசத் தீவிரவாதியான ஒசாமா பின் லேடனை மோசமானவரான பிரபாகரனை இந்தியாவிடம் பிடித்துக்கொடுப்பதற்கு தீவிரவாதத்தை எதிர்க்கும் அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும்.

ராஜிவ் கொலை ஒரு துயரமான சம்பவம் என்று கூறியதோடு நிறுத்திக் கொண்டு தப்பிக்க முயலும்விடுதலைப்புலிகளுக்கு இந்தியா எந்த விதத்திலும் ஆதரவு அளிக்கக் கூடாது.

மேலும் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு நீக்கக் கூடாது என்பதோடு, அவர்களுக்குஆதரவாக உள்ள இந்திய அமைப்புகளுக்கும் கட்சிகளுக்கும் கூடத் தடை விதிக்க வேண்டும்.

அந்தக் கட்சிகளும் அமைப்புகளும் யார் என்பது அனைவருக்குமே தெரியும். உண்மை ஒருநாள் வெளிவரும்என்றார் இளங்கோவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+