பிரபாகரனைப் பிடிக்க வாஜ்பாய்க்கு கடிதம் எழுதுகிறார் ஜெ.
சென்னை:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கைஎடுக்குமாறு கோரி பிரதமர் வாஜ்பாய்க்கு தான் கடிதம் எழுதப் போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று(வியாழக்கிழமை) கூறினார்.
ராஜிவ் காந்தி கொலையில் முக்கியக் குற்றவாளியான பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றுஏற்கனவே இரு நாடுகளும் கூட்டாகக் கூறியுள்ளன.
எனவே அதன்படி இலங்கை அரசே முன்வந்து இந்தியாவிடம் பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும்.
அவ்வாறு ஒப்படைக்க இலங்கை அரசு முடியாது என்று கூறினால், இந்திய ராணுவத்தினர் இலங்கைக்குச் சென்று,பிரபாகரனைப் பிடித்துக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை அரசை வலியுறுத்துமாறு விரைவில் வாஜ்பாய்க்குக் கடிதம்எழுதவுள்ளேன்.
ஏற்கனவே கடந்த 1991ல் இதுபோலவே அப்போதைய பிரதமர் நரசிம்மராவுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதன்தொடர்ச்சிதான் இந்தக் கடிதம்.
ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று குவித்துள்ள புலிகள் அமைப்பினர், இந்தியாவுக்குள் வந்து சுதந்திரமாகநடக்க விரும்புவது அதிர்ச்சியாக உள்ளது. காஷ்மீருக்குள் நுழைந்து மக்களைக் கொன்று குவிக்கும் பாகிஸ்தான்தீவிரவாதிகளுக்கும் புலிகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்தியாவுக்குள் - குறிப்பாக தமிழகத்துக்குள் - புலிகள் ஊடுருவ அனுமதிஅளிக்கக் கூடாது. இதுதான் என்னுடைய நிலை, எங்கள் அதிமுகவின் நிலையும் கூட என்றார் ஜெயலலிதா.
"புலிகளின் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் தனக்கு சிகிச்சை அளிப்பதற்காகத்தானே இந்தியாவுக்குள்அனுமதி கேட்கிறார்" என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, "உலகத்தில் எவ்வளவோ நல்ல மருத்துவமனைகள் உள்ளன,அங்கே அவர் தாராளமாகப் போகட்டுமே" என்று பதிலளித்தார் ஜெயலலிதா. மேலும், இதுகுறித்து மத்தியஅரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"நடந்ததை மறப்போம் என்று பிரபாகரன் கூறியுள்ளாரே?" என்ற மற்றொரு நிருபரின் கேள்விக்கு, "மறக்க,மன்னிக்க என்ற வார்த்தைகளுக்கே இடமில்லை" என்று பதிலளித்தார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications