புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து விரைவில் முடிவு: ரணில்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் சர்வதேசப் பத்திரிக்கையாளர் சந்திப்பு, இலங்கைஅமைதிப் பேச்சு முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல் கல் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேபாராட்டியுள்ளார்.

பிரபாகரனின் பேட்டி அமைதிப் பேச்சுவார்த்தையை மேலும் துரிதப்படுத்த உதவும் என்று இன்று (வியாழக்கிழமை)தனியார் எப்.எம். ரேடியோ ஒன்றில் பேசும்போது ரணில் தெரிவித்தார்.

தற்போது நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அனைத்து முயற்சிகளாலும் தான் மிகவும் திருப்திஅடைந்துள்ளதாக நேற்று அளித்த பேட்டியின்போது பிரபாகரன் குறிப்பிட்டார்.

ரணில் மிகவும் துணிச்சலான முடிவுகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் அதை நான் வரவேற்கிறேன் என்றும்பிரபாகரன் கூறியிருந்தார்.

நார்வே தூதுக் குழுவினரின் மூலம் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தை முழு வெற்றி பெறும் என்றும்பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

பிரபாகரனின் இந்தப் பேட்டியால் தான் மிகவும் மகிழ்ந்து போயிருப்பதாகவும் இலங்கையில் அமைதிக்கானமுயற்சிகள் மேலும் வலுவடைந்து வருவதாகவும் ரணில் கூறினார்.

புலிகள் மீதான தடையை விலக்குவது குறித்தும் தன்னுடைய அரசு பரிசீலித்து வருவதாகவும் ரணில் தெரிவித்தார்.

மே மாதம் முதல் வாரத்தில் புலிகள் மீதான தடை விலக்கப்படலாம் என்று இலங்கை அமைச்சர் ஒருவர் சமீபத்தில்கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+