கோவை ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை: 2 பேர் கைது
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேரைப் போலீசார்இன்று (வியாழக்கிழமை) கைது செய்தனர்.
கடந்த மார்ச் 28ம் தேதி கோயம்புத்தூர்-புதூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான முருகேசன் (35) படுகொலைசெய்யப்பட்டார். இதனால் கோயம்புத்தூர் முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது.
முருகேசன் கொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோயம்புத்தூரில் உள்ள மருந்துக் கடைஉரிமையாளரான சுல்தான் மீரான் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் முருகேசன் கொலைச் சம்பவம் தொடர்பாக அபு தாஹிர் மற்றும் ஷாஜகான் ஆகிய 2 பேரை இன்றுபோலீசார் கைது செய்தனர்.
சுல்தான் மீரான் கொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாகவே முருகேசனைத் தாங்கள் கொலைசெய்ததாக இந்த இரண்டு பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
முருகேசன் கொலையில் தொடர்புடைய மேலும் சிலரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சுல்தான் மீரான் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவருடைய நண்பர் ஒருவர் ஏற்கனவே சரணடைந்துவிட்டார் என்பதும் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications