மக்கள் நலனுக்காகவே காங்கிரசில் இணைப்பு: வாசன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மக்களின் நலனுக்காகவே நாங்கள் காங்கிரசில் இணைக்க முடிவு செய்துள்ளோம் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்திப்பதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ள வாசன்கூறியதாவது:
அனைத்து மக்களின் நலனுக்காகவே தமாகாவை காங்கிரசுடன் இணைப்பதற்கான முடிவை நாங்கள்எடுத்துள்ளோம்.
நாட்டிலேயே மிகப் பெரிய கட்சியான காங்கிரசில் இணைந்தால்தான் நாட்டு மக்களுக்கு நேரடியாக எங்களால்சேவையாற்ற முடியும் என்று கருதுகிறோம்.
சோனியா காந்தியைச் சந்தித்த பிறகு இணைப்பு குறித்த தேதியைத் தெரிவிப்பேன் என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications