எப்படியோ சமாதானம் வந்தால் சரிதான்: கருணாநிதி
சென்னை:
இலங்கையில் ஒரு வழியாக அமைதி ஏற்பட்டால் நிம்மதிதான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
உலகின் எந்தப் பகுதியிலும் துப்பாக்கிச் சத்தம், வெடிகுண்டுச் சத்தம், உயிர்ச் சேதம் போன்றவை நின்றிடுமானால்அதை வரவேற்பது மனிதாபிமானத்திற்கும் அப்பாற்பட்டது.
அந்த வகையில் தற்போது இலங்கையில் சமாதான முயற்சிகளுக்கான கதவுகள் திறந்துள்ளதாகவும், தீர்வுக்கானதிறவுகோல் என்ன என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேகூறியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது.
இலங்கை நம்முடைய அண்டை நாடு மட்டுமல்ல. ஒரு காலத்தில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துஇந்தியர்களோடு சுதந்திரப் போராட்டத்தில் அந்த நாடும் கலந்து கொண்டது. தஞ்சாவூர் மாவட்டத்தின் ஆளுகைக்குஉட்பட்டு இருந்ததையும் வரலாறு சொல்லும்.
அத்தகைய அண்டை நாட்டில் நிரந்தரமான அமைதி ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் தென்படும்போது, காந்தீயஅறவழியில் நாட்டம் கொண்ட யாருமே நிம்மதிப் பெருமூச்சு விடாமல் இருக்க முடியாது.
நார்வே நாட்டின் சமாதான முயற்சி தொடர்ந்து நடைபெறுவது வரவேற்கத்தக்கது என்று அவ்வறிக்கையில்கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications