மாப்ள !

Subscribe to Oneindia Tamil

சென்னை:

செல்போனில் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்க காவல்துறை முடிவுசெய்துள்ளது.

தமிழகம் முழுவதும் இது அடுத்த வாரம் முதல் அமலுக்கு வரும்.

இது குறித்து சென்னை போக்குவரத்து துணை கமிஷனர் உமா கணபதி சாஸ்திரி கூறுகையில்,

கழுத்தை சாய்த்து செல்போனை கழுத்துப் பிடியில் வைத்துக் கொண்டே பைக் ஓட்டுபவர்கள் எண்ணிக்கைஅதிகமாகிவிட்டது. இதனால் விபத்துகள் பெருகி வருகின்றன. இவர்கள் சாலையில் ஓரத்தில் நிறுத்திப் பேசுவதுதான் அவர்களுக்கும் நல்லது, சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும் நல்லது.

இனி செல்போனில் பேசிக் கொண்டே வண்டி ஓட்டுபவர்கள் மீது தீவிரமான நடவடிக்கை எடுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த "செல்"லோட்டிகள் தங்கள் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இனியும் "செல்"லில் பேசிக் கொண்டே வண்டி ஓட்டினால், மோட்டார் வாகனச் சட்டப்படி, பிடிபட்ட இடத்திலேயேரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றார்.

தமிழகம் முழுவதும் இந்த விதி அமலுக்கு வருகிறது. இது கார் ஓட்டிக் கொண்ட பேசுபவர்களுக்கும் செல்லும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+