""பயமா... அப்படீன்னா என்ன?"" கேட்கிறார் ஜெ.
சென்னை:
எப்படிப் பயப்படுவது என்றே எனக்குத் தெரியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதுகுறித்து நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:
முதன் முதலில் விடுதலைப்புலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதே என்னுடைய வற்புறுத்தலால்தான்.
கடந்த 1992ம் ஆண்டு அன்றைய பிரதமருக்குக் கடிதம் எழுதி புலிகளுக்குத் தடை விதிக்கச் செய்தேன். பின்னர்1994ம் ஆண்டு அந்தத் தடையை நீட்டிக்கக் கோரி வலியுறுத்தினேன்.
புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிடம் இலங்கை ஒப்படைக்க வேண்டும்என்று இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன.
அப்படி பிரபாகரனைப் பிடிக்க முடியாது என்று இலங்கை அரசு கூறிவிட்டால், இந்திய ராணுவத்தை இலங்கைக்குஅனுப்பி அவரைப் பிடித்து வருமாறு வலியுறுத்தும் தீர்மானம் வரும் 16ம் தேதி தமிழக சட்டசபையில்நிறைவேற்றப்பட உள்ளது என்றார் ஜெயலலிதா.
"புலிகளுக்கு எதிராக இவ்வளவு துணிச்சலுடன் முடிவு எடுப்பதால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படாதா?உங்களுக்கும் பயமாக இல்லையா?" என்ற நிருபர்கள் கேட்டனர்.
இதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, "அஞ்சுவது யாதொன்றும் அல்ல. அஞ்ச வருவதும் இல்லை. எப்படி பயப்படுவதுஎன்றே எனக்குத் தெரியாது. எனக்கு எந்த ஆபத்து வந்தாலும் சரி. நாட்டுக்காக என் கடமையைத் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பேன் என்று ஜெயலலிதா கூறினார்.
இதற்கிடையே புலிகளுக்கு எதிரான ஜெயலலிதாவின் கருத்துக்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவரானஇளங்கோவனும் தமாகா தலைவரான வாசனும் வரவேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications