சோனியாவை வேவு பார்க்கும் தமிழக உளவுத்துறை
பெருந்துறை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை உளவுத் துறை மூலம் வேவு பார்க்கும் ஜெயலலிதா அரசு விரைவில்கவிழும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
இதுகுறித்து பெருந்துறையில் நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
சோனியாவின் நடவடிக்கைகளைத் தன் கையில் உள்ள உளவுத் துறை மூலம் கண்காணிப்பதாக சட்டசபையில்சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார்.
ஏற்கனவே முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நடவடிக்கைகளை வேவு பார்த்த அப்போதைய பிரதமர்சந்திரசேகரின் மத்திய அரசு கவிழ்ந்தது.
தற்போது சோனியாவை வேவு பார்க்கும் ஜெயலலிதாவின் அரசுக்கும் இதே நிலைதான் ஏற்படும்.
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது மக்களின் நலனைப் பற்றி சிந்திக்காத இரு திராவிடக்கட்சிகளும் லாவணி பாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
இதற்கு சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் உடந்தையாக இருப்பதுதான் வேதனைக்குரியது என்று இளங்கோவன்கூறினார்.












Click it and Unblock the Notifications