பாலசிங்கத்தை இந்தியாவில் அனுமதித்தால் வழக்கு போடுவேன்: சுவாமி
சென்னை:
விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கத்தை இந்தியாவில் தங்க அனுமதித்தால் அதைஎதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு போடுவேன் என்று ஜனதா கட்சித் தலைவரான சுப்ரமணியம் சுவாமி இன்று(சனிக்கிழமை) கூறினார்.
இதுகுறித்து சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
புலிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறிய கருத்துக்களை வரவேற்கிறேன்.
பாலசிங்கத்தை இந்தியாவில் தங்க எந்தவிதத்திலும் அனுமதியே அளிக்கக் கூடாது. அவ்வாறு தங்க அனுமதிப்பதுபொடா சட்டத்திற்கு எதிரானதாகும்.
எனவே பாலசிங்கத்தை இந்தியாவில் தங்க அனுமதித்தால் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் நான் வழக்குதொடர்வேன்.
புலிகளுக்கு எதிராக தமிழக அரசு வரும் 16ம் தேதி கொண்டு வரும் தீர்மானத்தை திமுக தலைவரானகருணாநிதியும் ஆதரிக்க வேண்டும் என்று சுவாமி கூறினார்.
புலிகளுக்கு ஆதரவாக மதச் சார்பற்ற ஜனதா தளம்:
இதற்கிடையே புலிகளின் கோரிக்கையை ஏற்று அமைதிப் பேச்சுவார்த்தை விஷயத்தில் இந்தியா தலையிடவேண்டும் என்று மதச் சார்பற்ற ஜனதா தளம் கேட்டுக் கொண்டுள்ளது.அக்கட்சியின் அகில இந்திய துணைத் தலைவரான ஜி.ஏ. வடிவேலு இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
அண்டை நாடான பாகிஸ்தானிடம் தொடர்ந்து மிரட்டல்களைச் சந்தித்து வரும் இந்தியா, மற்றொரு அண்டைநாட்டிலிருந்து நட்புக் கரம் நீட்டும் புலிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
கடந்த 30 ஆண்டுகளாக தமிழர்கள் பெரும் போராட்டமே நடத்தி வரும் இலங்கையில் தற்போது அமைதி திரும்பும்சூழ்நிலை உருவாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். ஆகியோர் புலிகளுக்கு நிதி உதவிசெய்துள்ளனர். புலிகள் ஒன்றும் தீண்டத் தகாதவர்கள் கிடையாது.
மகாத்மா காந்தியைக் கொன்றவன் ஒரு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவன்தான். ஆனால் அப்போது தடைசெய்யப்பட்ட அந்த இயக்கம், பின்னர் மீண்டும் தடை நீக்கம் பெற்றது.
எனவே புலிகளின் மீதான தடையை விலக்கி இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றிபெற இந்தியா உதவவேண்டும் என்று வடிவேலு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications