ஜெ. மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்: வைகோ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்த பூமியில் எந்த சக்தியாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளரான வைகோஇன்று (சனிக்கிழமை) கூறினார்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசி வரும் வைகோ மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் மீதுபொடா சட்டம் பாயும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதுகுறித்து இன்று சென்னையில் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:
அடிப்படை உரிமைகளுக்காகவே நான் வாழ்நாள் முழுக்க போராடிக் கொண்டிருக்கிறேன். "மிசா"வில் நான் படாதகஷ்டங்களா?
வாழ்க்கையில் இப்படி எவ்வளவோ கஷ்டங்களை நான் சந்தித்துக் கொண்டிருப்பதால், எந்தவிதமான சக்தியாலும்என்னை ஒன்றும் செய்ய முடியாது.
ஏதேச்சாதிகாரத்தையே தன்னுடைய கொள்கையாகக் கொண்டுள்ள ஜெயலலிதாவாலும் என்னை ஒன்றும்செய்துவிட முடியாது என்று வைகோ கூறினார்.












Click it and Unblock the Notifications