பிரபாகரனைப் பிடிக்கக் கோரி 22ம் தேதி வாழப்பாடி உண்ணாவிரதம்
புதுக்கோட்டை:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசைவலியுறுத்தி வரும் 22ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முன்னாள் தமிழக காங்கிரஸ்தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி இன்று (சனிக்கிழமை) கூறினார்.
தமிழகத்தில் மதிமுக, பாமக, திமுக மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக்கட்சிகளும் பிரபாகரனைப் பிடித்துக் கொண்டு வந்து தண்டித்தே ஆக வேண்டும் என்று கூக்குரலிட்டு வருகின்றன.
இந்நிலையில் பிரபாகரனைப் பிடித்துக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசைவலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக வாழப்பாடி ராமமூர்த்தி இன்று புதுக்கோட்டையில் கூறினார்.
சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் முன்பாக வரும் 22ம் தேதி தான் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் கூறிய ராமமூர்த்தி, ராஜிவ் கொலைக்கு முக்கியக் காரணமான பிரபாகரனை இந்தியாவுக்குக்கொண்டு வந்து தண்டித்தே தீர வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications