சென்னையில் நடு ரோட்டில் தீப் பிடித்து எரிந்த பஸ்
சென்னை:
சென்னை வேளச்சேரி பஸ் நிலையப் பகுதியில் மாநகரப் போக்குவரத்துக் கழக பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
வேளச்சேரி விஜயநகர் பகுதியில் பஸ் நிலையம் உள்ளது. தாம்பரத்திலிருந்து தி.நகர் செல்லும் 5 ஏ பஸ் காலை 10 மணியளவில் பஸ்நிலையத்திற்கு வந்தது. அப்போது திடீரென டிரைவர் மதுரைமுத்துவின் சீட்டுக்குக் கீழே தீப்பிடித்துக் கொண்டது.
இதைப் பார்த்த டிரைவர் உடனடியாக தீ... தீ என்று கத்திக் கொண்டு பஸ்ஸை விட்டுக் குதித்தார். பயணிகளும் அடித்துப் பிடித்துக் கொண்டுஇறங்கி ஓடினர்.
அவர்கள் இறங்கிய சிறிது நேரத்தில் பஸ் முழுவதுமாக கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. பஸ் எரிவதைப் பார்த்த அப்பகுதி மக்கள்கைகளில் கிடைத்த பாத்திரங்களில் தண்ணீரைப் பிடித்து வந்து பஸ் மீது ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
தீயணைப்பு படைக்கும் தகவல் தந்தனர். இதையடுத்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. பஸ்சின் டீசல் டேங்க் வரை வந்து விட்டதீயை வீரர்கள் உடனடியாக அணைத்து விட்டனர்.
இதனால் பஸ் வெடித்துச் சிதறாமல் தப்பியது. டீசல் டேங்க் வெடித்திருந்தால் அங்கு மிகப் பெரிய விபத்து ஏற்ப்பட்டிருக்கும்.
பின்னர் எரிந்து போன பஸ் சைதாப்பேட்டை சின்னமலை பணிமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. பஸ்சின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு தான் இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications