தென் கொரியாவில் விமானம் விழுந்து 109 பேர் பலி
சியோல்:
சீனாவுக்குச் சொந்தமான ஏர் சீனா போயிங் 767 என்ற விமானம் தென் கொரியாவில் இன்று (திங்கள்கிழமை)காலை விழுந்து நொறுங்கியதில் 109 பேர் உயிரிழந்தனர்.
சீன தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து தென் கொரியாவின் புசன் நகருக்குச் சென்று கொண்டிருந்த இந்த சிஏ129 ரகவிமானம், மற்றொரு தென் கொரிய நகரமான ஜிம்ஹேவில் மக்கள் வசிக்கும் பகுதியில் இன்று காலை 7.50 மணிக்கு(இந்திய நேரப்படி) விழுந்து நொறுங்கியது.
விழுந்த வேகத்தில் அந்த விமானம் சுக்கு நூறாகச் சிதறி விட்டதாக விபத்தை நேரில் பார்த்த சிலர் கூறினர்.
விமானத்திலிருந்த 155 பயணிகள் மற்றும் 11 விமானச் சிப்பந்திகள் அனைவருமே உயிரிழந்து விட்டதாக முதலில்அஞ்சப்பட்டது.
ஆனால் 109 பேர் மட்டுமே இறந்து விட்டதாகவும் 47 பேர் படுகாயங்களுடன் காப்பற்றப்பட்டதாகவும்அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் 10 பேரின் உடல் கிடைக்கவில்லை.
மழை காரணமாக ரோடுகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதால், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள்நடந்து வருகின்றன. ஆனாலும் மழை தொடர்ந்து பெய்து வந்ததால் மீட்புப் பணியில் துவக்கத்தில் பெரிதும் தாமதம்ஏற்பட்டது.
மோசமான வானிலை காரணமாக முதல் முறை தரையிறங்க முயற்சித்தபோதே ஏகப்பட்ட இடர்ப்பாடுகள்தோன்றியதாகவும், பின்னர் வானில் ஒருமுறை வட்டமடித்து விட்டு 2வது முறையாகத் தரையிறங்க முயற்சிசெய்தபோதுதான் அருகிலிருந்த ஒரு மலையில் மோதி இந்த விமானம் விபத்துக்குள்ளானதாக புசன் விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications