குஜராத்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
குஜராத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக நீடித்து வரும் வன்முறை தொடர்பாக மத்திய அரசுக்கும் அம்மாநிலமுதல்வர் நரேந்திர மோடிக்கும் மாநில போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் உச்ச நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை)நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மல்லிகா சாராபாய், திகண்ட் ஓசா மற்றும் இந்துகுமார் ஜானி ஆகியோர் குஜராத் வன்முறை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர்.
மனித உரிமை கமிஷன் விசாரித்து அளித்த அறிக்கையின்படி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்என்றும் மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
சிறுபான்மை சமூகத்தினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் மீதுமுறையான குற்றச்சாட்டுக்களைக் கூடப் பதிவு செய்யாமல் போலீசார் ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்டனர்என்று இவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் சிதம்பரம் கூறினார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பரூச்சா, நீதிபதி சிவராஜ் பாட்டீல்,நீதிபதி சேமா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நடந்த வன்முறைகள் தொடர்பாக விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும்பாஜகவுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.