இப்போதைக்கு ஆதரவு வாபஸ் இல்லை: நாயுடு
ஐதராபாத்:
மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டு வரும் ஆதரவை இப்போதைக்கு வாபஸ் பெறப் போவதில்லை என்று தெலுங்குதேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு கூறியதையடுத்து, வாஜ்பாய் அரசுக்கு ஏற்படவிருந்த ஆபத்துதற்போதைக்கு நீங்கியுள்ளது.
நேற்று காலையில் நடந்த தெலுங்கு தேசக் கட்சியின் கூட்டத்தில், குஜராத் முதல்வர் மோடியை நீக்காவிட்டால்மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பின்னர் நேற்று மாலை இக்கட்சியின் மேலிடக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. அதற்கு முன்னதாகவே தேசியஜனநாயகக் கூட்டணியில் உள்ள பல கட்சித் தலைவர்களுடன் பேசிய நாயுடு, பாஜகவுக்கு எதிராக கோஷ்டிஉருவாக்க முயற்சி செய்தார்.
ஆனால் நாயுடுவுக்கு ஆதரவு தர பல தலைவர்களும் மறுத்து விட்டனர். இதையடுத்து மத்திய அரசுக்கான ஆதரவைவாபஸ் பெறப் போவதில்லை என்று நாயுடு அறிவித்து விட்டார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணிஅளவில் இந்த அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து வாஜ்பாய் அரசு தப்பியதாகக் கருதப்பட்டாலும், இன்று 3வது முறையாகக் கூடவுள்ளநாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில், மோடி பிரச்சனையை மீண்டும் கிளப்பப் போவதாக தெலுங்குதேசம் அறிவித்துள்ளது.
இதையடுத்து நாடாளுமன்றத்தில் இன்று மோடி விவகாரம் தொடர்பாக அனல் பறக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications