For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் வங்கிப் பணிகள் ஸ்தம்பிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள்,இன்சூரன்ஸ் துறை ஊழியர்கள், பொதுத் துறை நிறுவனங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த ஊழியர்கள்வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் 1 கோடி பேர் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் வங்கிப் பணிகள் முழு அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வங்கி ஊழியர்கள் போராட்டங்களையும் ஆர்பாட்டங்களையும் நடத்தினர்.

சென்னையில் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் அண்ணா சாலையில் உள்ள தங்கள் தலைமைஅலுவலகத்தின் வெளியே போராட்டம் நடத்தினர்.

அதே போல எல்.ஐ.சி. ஊழியர்கள் அண்ணாசாலையில் போராட்டம் நடத்தினர்.

இது தவிர தமிழகம் முழுவதும் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களில் சரக்குகள் இறக்கும் பணியும் கப்பல்களில் சரக்குகளை ஏற்றும் பணியும்பாதிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X