புலிகள் மீதான தடை நீக்கப்படும்: ரணில் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க முடிவு செய்துள்ளதாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேகூறினார்.
இந்தத் தடை நீக்கம் இலங்கையில் மட்டுமே அமலுக்கு வரும். இதன்மூலம் சர்வதேச அளவில் புலிகள் மீதுபோடப்பட்டுள்ள தடையில் எந்த மாற்றமும் இருக்காது.
அதற்கேற்ற வகையில் தான் இந்தத் தடையை நீக்கப் போகிறோம்.
இந்தக் கோரிக்கையை புலிகள் வலியுறுத்தி வருவதால் அதை தீவிரமாக யோசித்து வருகிறோம். இது குறித்துநாடாளுமன்றத்திலும் விவாதிப்போம் என்றார்.
இலங்கையில் கடந்த 1998ம் ஆண்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டது.
ரணிலுடன் பேச்சு நடத்திய நார்வே துணை அமைச்சர் நாளை புலிகள் தலைவர் பிரபாகரனையும் சந்தித்துப் பேச்சுநடத்தவுள்ளார்.












Click it and Unblock the Notifications