செங்கல்பட்டு: விசாரணைக் கைதி சாவு - ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு போலீஸ் நிலையத்தில் இருந்த கைதி நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இறந்ததையடுத்து, இதுதொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் நர்ஸ் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விருதுநகரைச் சேர்ந்த தேவசுந்தர் (42)என்பவரை செங்கல்பட்டு போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டில் உள்ள தன்னுடைய வீட்டைக் காலி செய்துவிட்டு மீண்டும் விருதுநகர் திரும்புவதற்காகவந்திருந்தபோதுதான் போலீசார் அவரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் போலீஸ் காவலில் இருந்த தேவசுந்தர் நேற்று இரவு நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்துஅவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாகவும்போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் இதில் மர்மம் இருப்பதாகக் கூறி, இந்தச் சாவு குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications