லஞ்சம் வாங்கியதாக கைதான போலீஸ் அதிகாரி ஜாமீனில் வந்து தலைமறைவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுதலையான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்,தற்போது தலைமறைவாகி விட்டார்.
சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள சங்கர் நகர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் ஜெர்ரி.
புகார் கொடுத்தவர்களிடமும் குற்றம் சுமத்தப்பட்டவர்களிடமும், ஜெர்ரி சரிவர ஏதும் விசாரிக்காமல்அவர்களிடமிருந்து லஞ்சம் மட்டும் நிறைய வாங்கியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து சங்கர் நகரிலிருந்து துரைப்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு ஜெர்ரி மாற்றப்பட்டார். ஆனால் அங்கும்இவர் தொடர்ந்து லஞ்சம் வாங்கியதாகப் புகார்கள் வர ஆரம்பித்தன.
இதைத் தொடர்ந்து ஜெர்ரி சஸ்பெண்டு செய்யப்பட்டார். பின் அவரை போலீசார் கைதும் செய்தனர்.
இதற்குப் பிறகு ஜாமீனில் வெளியில் வந்த ஜெர்ரி, தற்போது தலைமறைவாகிவிட்டார். அவரைப் போலீசார்தீவிரமாகத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications