இலங்கை அமைதிப் பேச்சு ஜூனில் நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே தாய்லாந்தில் வரும் ஜூன் மாதத்தில்தான் தொடங்கும்என்று தெரிகிறது.

நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி இலங்கை அரசு இன்னும் பல திட்டங்களை அமல் படுத்தாத காரணத்தால்,அதற்குப் பிறகே பேச்சுவார்த்தையைத் துவக்க முடியும் என்று புலிகளின் வானொலியான "வாய்ஸ் ஆப் டைகர்ஸ்"இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தது.

புலிகளின் தலைவரான பிரபாகரனை நார்வே தூதுக் குழுவினர் நேற்று சந்தித்தபோது இந்த நிபந்தனையைப்புலிகள் விடுத்துள்ளனர். இலங்கை அரசின் சில தாமதங்களினால் பிரபாகரன் அதிருப்தி அடைந்துள்ளதாகவும்"தமிழ்நெட்" என்ற வெப்சைட் தெரிவித்துள்ளது.

ஆனால் மே மாதத்திலேயே எப்படியும் பேச்சுவார்த்தையைத் துவக்கி விடுவோம் என்று இலங்கை அரசு நம்பிக்கைதெரிவித்தபோதிலும், அப்படியே பேச்சுவார்த்தை தள்ளிப் போனால் அதற்கும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.

தங்கள் மீதான தடையை நீக்குவது உள்பட சில முக்கியமான நிபந்தனைகளை நிறைவேற்றினால்தான் பேச்சுக்கேவருவோம் என்று நார்வே தூதுக் குழுவில் இடம் பெற்றுள்ள அந்நாட்டின் துணை வெளியுறவுத்துறை அமைச்சரானவிதார் ஹெல்கெசனிடம் பிரபாகரன் கூறியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை ஹெல்கெசன் இன்று சந்திக்கவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+