இலங்கை அமைதிப் பேச்சு ஜூனில் நடக்கும்?
கொழும்பு:
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே தாய்லாந்தில் வரும் ஜூன் மாதத்தில்தான் தொடங்கும்என்று தெரிகிறது.
புலிகளின் தலைவரான பிரபாகரனை நார்வே தூதுக் குழுவினர் நேற்று சந்தித்தபோது இந்த நிபந்தனையைப்புலிகள் விடுத்துள்ளனர். இலங்கை அரசின் சில தாமதங்களினால் பிரபாகரன் அதிருப்தி அடைந்துள்ளதாகவும்"தமிழ்நெட்" என்ற வெப்சைட் தெரிவித்துள்ளது.
ஆனால் மே மாதத்திலேயே எப்படியும் பேச்சுவார்த்தையைத் துவக்கி விடுவோம் என்று இலங்கை அரசு நம்பிக்கைதெரிவித்தபோதிலும், அப்படியே பேச்சுவார்த்தை தள்ளிப் போனால் அதற்கும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.
தங்கள் மீதான தடையை நீக்குவது உள்பட சில முக்கியமான நிபந்தனைகளை நிறைவேற்றினால்தான் பேச்சுக்கேவருவோம் என்று நார்வே தூதுக் குழுவில் இடம் பெற்றுள்ள அந்நாட்டின் துணை வெளியுறவுத்துறை அமைச்சரானவிதார் ஹெல்கெசனிடம் பிரபாகரன் கூறியுள்ளார்.
இந்நிலையில் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை ஹெல்கெசன் இன்று சந்திக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications