மலேசிய சிறைகளில் வாடும் தமிழர்கள்: மனித உரிமை கமிஷன் நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மலேசியச் சிறைச்சாலைகளில் வாடும் நூற்றுக்கணக்கான தமிழர்களை உடனடியாக விடுவிப்பதற்கு ஏற்பாடுசெய்யுமாறு, மலேசிய நாட்டு தேசிய மனித உரிமை கமிஷனுக்கு, தமிழக மனித உரிமை கமிஷன் கடிதம்அனுப்பியுள்ளது.

தமிழகத்திலிருந்து வேலை தேடிச் சென்று பிடிபட்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள் மலேசிய சிறைச்சாலைகளில்கொடுமையான நிலையில் வாடுவதாக சமீபத்தில் "குமுதம்" வாரப் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியிருந்தது.

இதைக் கண்ட தமிழக மனித உரிமை கமிஷன் உறுப்பினரான நீதிபதி சம்பந்தம், இந்த விஷயம் தொடர்பாகமலேசிய நாட்டின் தேசிய மனித உரிமை கமிஷனுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

பத்திரிக்கையில் வெளியாகியுள்ள செய்தியின் மூலம், மலேசிய சிறைகளில் நிலவும் கொடூரமான சூழ்நிலை தெரியவருகிறது.

மலேசிய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், குறிப்பாக தமிழகத்திலிருந்து வேலை தேடிச் சென்றதமிழர்கள் மிகப் பெரும் சித்திரவதைக்கு உள்ளாகியிருப்பதும் தெரிய வருகிறது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக, மலேசிய தேசிய மனித உரிமை கமிஷனைச் சேர்ந்தவர்கள் சிறைச்சாலைக்குச்சென்று பார்க்க வேண்டும்.

மேலும், அங்கு வாடும் தமிழர்களை உடனடியாக தமிழகத்திற்கு அனுப்புவதற்கும் அவர்கள் ஏற்பாடு செய்யவேண்டும் என்று அக்கடிதத்தில் சம்பந்தம் கோரியுள்ளார்.

மலேசியச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் சரியான சாப்பாடு கிடைக்காமல்கொடுமைப்படுத்தப்படுவதாகவும், சிறைச்சாலையில் உள்ள கழிப்பறையில்தான் அவர்கள் படுத்துத் தூங்கவேண்டியுள்ளது என்றும், ஓரினச் சேர்க்கைக்கு பிற கைதிகளால் அழைக்கப்படும் அவலம் இருப்பதாகவும் "குமுதம்"செய்தி வெளியிட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+