புலிகளுக்கு ஆதரவு: நெடுமாறன் மீது வழக்கு
சென்னை:
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மீதுபோலீசார் 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
சிறந்த தமிழர் தலைவராக அறியப்பட்டவர் பழ. நெடுமாறன். இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் குறித்துஉலகெங்கும் எடுத்துக் கூறி வருபவர்.
இவர் மீது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி தமிழக போலீசார் 2 வழக்குகளைப் பதிவுசெய்துள்ளனர்.
சமீபத்தில் புலிகள் குறித்த புத்தகம் ஒன்றை நெடுமாறன் எழுதியிருந்தார். அது வெளியிடப்பட்டது. இதுகுறித்து ஒருவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தகத்தை அச்சடித்த ஷாகுல் ஹமீது என்பவர் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அதேபோல, சமீபத்தில் நடந்த கூட்டமொன்றில் பிரபாகரனின் கிளிநொச்சி பேட்டி குறித்து தமிழர் தேசிய இயக்கத்தலைவர்களுடன் நெடுமாறன் விவாதம் நடத்தினார். இது குறித்தும் நெடுமாறன் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்புக்கு ஆதரவாக நெடுமாறன் செயல்படுவதால் அவர் மீதுவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போது இந்த இரு வழக்குகளையும் கியூ பிரிவு போலீசார்விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications