ஜெ. கருத்து பற்றி கவலைப்படவில்லை - வாஜ்பாய்
டெல்லி:
குஜராத் முதல்வரான நரேந்திர மோடியை நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது பற்றிதான் கவலைப்படவில்லை என்று பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
மோடியை நீக்கியே ஆக வேண்டும் என்று எதிர்க் கட்சி எம்.பிக்கள் மட்டுமில்லாமல் பாஜகவின் கூட்டணிக்கட்சியான தெலுங்கு தேசமும் பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், அவரை நீக்குவதுதான் சரி என்று நேற்று(புதன்கிழமை) ஜெயலலிதா கூறினார்.
குஜராத்தில் இன்னும் வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நாட்டின் நலனைக் கருதி மோடியைநீக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் ஜெயலலிதா கூறியிருந்தார்.
ஆனால் ஜெயலலிதாவின் இந்தக் கருத்தைப் பற்றித் தான் கவலைப்படவில்லை என்று வாஜ்பாய் நேற்றிரவுதெரிவித்தார்.
""ஜெயலலிதாவின் அதிமுக ஒரு தனிக் கட்சி. அதற்கென்று தனியான கொள்கைகள் உண்டு. ஆனால் அக்கட்சிஎங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லை. திமுகதான் எங்கள் பக்கம் உள்ளது"" என்றார் வாஜ்பாய்.