For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நதி நீர் பங்கீடு: தமிழகத்தின் கோரிக்கைகைள் ஏற்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மத்திய அரசு உருவாக்கியுள்ள தேசிய நதி நீர் கொள்கையில் தமிழகத்தின் பரிந்துரைகளும் சேர்க்கப்பட்டுள்ளதாகபொதுப் பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

இந்த விவகாரத்தில் தமிழகம் தனது கோரிக்கைகைளை சரியாக வலியுறுத்தவில்லை என திமுக முன்னாள்அமைச்சர் துரைமுருகன் மாநில அரசை குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம்,

கடந்த ஏப்ரல் 1ம் தேதி டெல்லியில் நடந்த முதல்வரர்கள் மாநாட்டில் தமிழகத்தின் பரிந்துரைகள்ஏற்கப்பட்டுவிட்டன. புதிய தேசிய நதி நீர் கொள்கையிலும் அதை சேர்ப்பதாக அறிவித்துவிட்டது.

நதி நீர் விவகாரங்களில் நடுவர் மன்றத்தின் தீர்ப்புகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் போல ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று தமிழகம் கோரியது. அதை மத்திய அரசு ஏற்று வேண்டிய திருத்தமும் செய்துவிட்டது என்றார்.

இதன் மூலம் காவிரி நதி நீர் விவகாரத்தில் நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மாநில அரசுகள் கட்டாயம் அமலாக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்காமல் இருந்து வரும் கர்நாடகம் போன்ற அரசுகளுக்குஇந்தத் திருத்தம் நெருக்கடியைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X