For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாழையூத்து அருகே பஸ்-லாரி மோதி 4 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

தாழையூத்து:

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே டவுண் பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருபெண் உள்பட 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

காவுக்குறிச்சி நோக்கி இன்று காலை ஒரு டவுண் பஸ் சென்று கொண்டிருந்தது. எதிர்த் திசையில் கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி படுவேகத்துடன் வந்து கொண்டிருந்தது.

தாழையூத்து அருகே வந்து கொண்டிருக்கும்போது, பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இவ்விபத்தில் ஒரு பெண் உள்பட நான்கு பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த 11 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X