இடைத் தேர்தல் பராக்.. பராக்...: முன்பே முடிகிறது சட்டசபை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் 3 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் அதில் முதல்வர், அமைச்சர்கள் பிரச்சாரம்செய்வதற்கு வசதியாக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரை முன் கூட்டியே முடித்துக் கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மே 25ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போதுசைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் மே 31ம் தேதி இடைத் தேர்தல்அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்கு வசதியாக சட்டசபைக் கூட்டம் மே 10ம் தேதியுடன் முடித்துக்கொள்ளப்படவுள்ளது.
சட்டசபையின் அலுவல் ஆய்வுக் குழு கூடி இந்த முடிவை எடுத்தது.












Click it and Unblock the Notifications