For Quick Alerts
For Daily Alerts
Just In
2004 வரை யோசிக்கவே மாட்டோம்: பா.ஜ.க.
திருநெல்வேலி:
அடுத்த தேர்தல் நடக்கவிருக்கும் 2004ம் ஆண்டுதான் கூட்டணி குறித்து யோசிக்கப்படும் என்று தமிழக பாஜகபொதுச் செயலாளர் இல. கணேசன் இன்று (வெள்ளிக்கிழமை) கூறினார்.
திருநெல்வேலியில் பாஜகவின் இரண்டு நாள் மாநில செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை தொடங்குகிறது.
அதில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி வந்த இல. கணேசன் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
பிற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள இப்போதைக்கு எந்தத் தேவையும் இல்லை. அவசியமும்இல்லை.
அடுத்த தேர்தல் நடக்கும்போது, அதாவது 2004ம் ஆண்டுக்குப் பிறகுதான் அதுகுறித்து யோசிக்கப்படும் என்றார்.
Comments
Story first published: Friday, April 19, 2002, 5:30 [IST]