குஜராத் விவகாரம்: பா.ஜ.க. நாடகமாடுவதாக கம்யூனிஸ்ட் புகார்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
குஜராத்தில் தேர்தல் நடத்த பாஜக போடும் ஞூடகங்களுக்கு தேர்தல் கமிஷன் மயங்கி விடக் கூடாது என்று இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா இன்று கூறினார்.
கோயம்புத்தூரில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
குஜராத்தில் சிறுபான்மையினரான முஸ்லீம்கள் மீது இந்து அமைப்பினர் இனவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.இதனால் அங்கு ரத்த ஆறு ஓடுகிறது.
இந்நிலையில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை நீக்குவதற்குப் பதிலாக சட்டசபையைக் கலைத்து விட்டுதேர்தல் நடத்த பாஜக முயற்சி செய்து வருகிறது.
சமீபத்திய வன்முறைச் சம்பவங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பாஜக நினைக்கிறது.
பாஜகவின் இந்தச் செயல்களுக்கு மத்திய தேர்தல் கமிஷன் மயங்கி விடக் கூடாது என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications