மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்: அரசு மீது ஸ்டாலின் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேர்தல் விதிமுறைகளை மீறி சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி அதிகாரிகளை தமிழக அரசுஇடமாற்றம் செய்துள்ளதாக சென்னை மாநகர மேயர் ஸ்டாலின் புகார் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வெளியே வந்தபோது செய்தியாளர்களிடம்ஸ்டாலின் கூறுகையில்,

சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் வரும் மே 31ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி மாநகராட்சி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பின்தேதியிட்டுத்தான் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்று தேர்தல் விதிமுறைகளை மீறி இடமாற்றம் செய்துள்ளதுசட்டவிரோதமானது.

தமிழக அரசின் இந்தத் தவறான நடவடிக்கை தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிதேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதப்படும் என்றார் ஸ்டாலின்.

இதற்கிடையே இந்தத் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தேர்தல் கமிஷனுக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகதிமுக எம்.பியான குப்புசாமி சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+