ஹிட்லர் பிறந்த தினம்: இந்தியர்களே எச்சரிக்கை
மாஸ்கோ:
நாளை ஹிட்லரின் பிறந்த தினம் கொண்டாடப்படுவதையொட்டி ரஷ்யாவில் உள்ள இந்தியர்கள் தங்கள்பாதுகாப்பை அதிகப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது அவர்கள் கொல்லப்படுவார்கள் எனநாசி வெறியர்கள் இந்தியத் தூதரகத்துக்கு ஈ-மெயில் மூலம் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இது போன்ற மிரட்டல் பல்வேறு தூதரகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இதனால் இந்தியர்கள் உள்படவெள்ளையர் அல்லாத பிற இனத்தினர் ஸ்கின்ஹெட்ஸ் எனப்படும் நாசி இன வெறியர்களால் தாக்கப்படலாம் என்றஅச்சம் பரவியுள்ளது.
இதையடுத்து ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகம் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு ஒரு எச்சரிக்கைவெளியிட்டுள்ளது. அதில்,
இரவு நேரத்தில் வீட்டுக்கு வெளியே வருவதைத் தவிர்க்கவும். இரவு 8 மணிக்கு மேல் பாதாள ரயிலில் செல்லவேண்டாம். மாஸ்கோவின் மார்க்கெட் பகுதிகளில் நாளை நடமாட வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் பிற இனத்தினருக்கு எதிரான நாசி ஸ்டைல் தாக்குதல் அதிகரித்து வருவதையடுத்து அதைத் தடுக்கபுதிய சட்டத்தைக் கொண்டு வர அதிபர் புடின் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இதே போல ஹிட்லரின் ரசிகர்கள் அடங்கிய ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலியிலும் இந்த நாசிக் கும்பல்கள் தாக்குதல்நடத்தலாம். எனவே, அங்கிருக்கும் இந்தியர்களும் நாளை முன் ஜாக்கிரதையுடன் இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications