""அந்தர் "பல்டி" அடிக்கும் ஜெ.க்கு பன்னீர்தான் பலி கடா"": கருணாநிதி
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வேவு பார்க்கவில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாமறுத்துள்ளதன் மூலம் அவர் அந்தர் "பல்டி" அடித்துள்ளார் என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று குற்றம்சாட்டினார்.
சோனியாவை மத்திய அமைச்சர் மாறன் சந்தித்துப் பேசினார் என்று கடந்த வாரம் சட்டசபையில் ஜெயலலிதாதெரிவித்தார்.
இதையடுத்து தமிழக அரசு சோனியாவை வேவு பார்ப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் புகார்கூறியிருந்தார். இந்தப் புகாரை நேற்று சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சரும் முன்னாள் முதல்வருமானபன்னீர்செல்வம் வன்மையாக மறுத்தார்.
இதுகுறித்து இன்று கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த வாரம்தான் போலீஸ் உளவுத்துறை மூலம் மாறன்-சோனியா சந்திப்பு குறித்து ஜெயலலிதா சட்டசபையில்கூறினார்.
ஆனால் அதற்குள்ளாகவே நேற்று சட்டசபையில் பன்னீர்செல்வம் மூலம் சோனியா வேவு பார்க்கப்படவில்லைஎன்று அறிவித்து விட்டார்.
முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதைத் தன்னுடைய வழக்கமாகவே கொண்டுவிட்டார் ஜெயலலிதா. ஆனால்இப்படி அந்தர் "பல்டி" அடித்துள்ளதன் மூலம் பாவம் பன்னீரைத்தான் ஜெயலலிதா "பலி கடா" ஆக்கிவிட்டார்.
பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்று ஜெயலலிதா துடியாகத் துடித்தார். ஆனால் வாஜ்பாய் அவரைக் கண்டுகொள்ளவேயில்லை.
இதையடுத்துதான் தற்போது சோனியாவின் காலில் விழுந்து அவரையும் வாரி விடுவதற்கு ஜெயலலிதா தவியாய்தவித்துக் கொண்டிருக்கிறார் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications