மோடியால் நாடாளுமன்றம் தொடர்ந்து ஸ்தம்பிப்பு
டெல்லி:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விவகாரத்தால் நாடாளுமன்றம் 5வது நாளாக தொடர்ந்து ஸ்தம்பித்தது. இன்றும்ராஜ்யசபாவும் லோக்சபாவும் ஒத்தி வைக்கப்பட்டன.
மோடியை நீக்கியே ஆக வேண்டும் என்று கோரி வரும் எதிர்க் கட்சிகளும் தெலுங்கு தேசம் போன்ற மத்தியஅரசின் கூட்டணிக் கட்சிகளும் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளன.
மோடி விவகாரம் தொடர்பாக அவை விதி 184வது பிரிவின் கீழ் விவாதிக்க வேண்டும் என அவர்கள் கோரிவருகின்றனர். இந்த விதியின் கீழ் விவாதம் நடத்தினால் ஓட்டெடுப்பு நடக்கும்.
அப்போது தெலுங்கு தேசம் எதிர்த்து வாக்களித்தால் மத்திய அரசுக்கு மெஜாரிட்டி இல்லாமல் போகும். அதைவைத்து அரசைக் கவிழ்க்க எதிர்க் கட்சிகள் முயலும். இதனால், ஓட்டெடுப்புக்கு ஒப்புக் கொள்ள பா.ஜ.க. மறுத்துவருகிறது.
இந்த ஓட்டெடுப்பு விவகாராத்தால் கடந்த 5 நாட்களாக இரு அவைகளும் செயல்படவில்லை. வழக்கம்போல்இன்று அவை கூடியதும் ஓட்டெடுப்பு கோரி எதிர்க் கட்சிகள் கோஷம் எழுப்ப பா.ஜ.கவினர் எதிர்கோஷம் எழுப்பஒரே கூச்சல் குழப்பம் நிலவியது.
இதையடுத்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டன. கடந்த 4 நாட்களாக இது தான் நடந்து வருகிறது.
அதே நேரத்தில் குஜராத்தில் வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்றும் அங்கு வன்முறை நடந்தது.போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறைக் கும்பலைக் கலைத்தனர்.
சிறுபான்மையினரை தாக்குவதை தடுக்க முடியாமல் அல்லது தடுக்காமல் இருந்து வரும் மோடியைப் பாதுகாக்கமத்திய அரசு பெரும் முயற்சி எடுத்து வருவது அதன் கூட்டணிக் கட்சிகளையே எரிச்சல்படுத்தியுள்ளது.
இந் நிலையில் அவையை நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு லோக்சபா துணை சபாநாயகர் சயீத்ஏற்பாடு செய்திருந்தார். இதிலும் 184வது விதிப்படி விவாதம் நடத்த எதிர்க் கட்சிகள் வலியுறுத்த பா.ஜ.கவினர்மறுக்க எந்த முடிவும் எடுக்க முடியாமல் கூட்டம் பாதியிலேயே தோல்வியில் முடிந்தது.
இக் கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய், எதிர்க் கட்சித் தலைவர் சோனியா காந்தி இருவரும் கலந்து கொண்டனர்.ஆனால், இருவரும் தங்கள் கருத்தையே தொடர்ந்து வலியுறுத்தியதால் கூட்டத்தில் முடிவு எதுவும்எடுக்கப்படவில்லை.