For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயா டிவி கேமராமேனுக்கு அடி-உதை

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் ஜெயா டிவியின் கேமராமேன் ஒரு காண்ட்ராக்டரின் கூலியாட்களால் தாக்கப்பட்டார்.

பத்திரிக்யாைளர் மீதான இத் தாக்குதலைக் கண்டித்து இன்று நிருபர்கள் புதுவை சட்டப் பேரவை நிகழ்ச்சிகளைப்புறக்கணித்தனர்.

பிரபு என்ற அந்த கேமராமேன் உப்பளம் பகுதியில் படகுகளைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போதுஅங்கு வந்த காண்ட்ராக்டர் ஒருவர் எதற்காக படம் பிடிக்கிறாய் என்று கேட்டார். ஒரு நிகழ்ச்சிக்காக படம்பிடிப்பதாகக் கூறிய பிரபுவை அவர் தாக்கினார், தொடர்ந்து அவரது கூலியாட்களும் அவரைத் தாக்கினர்.

இதில் பலத்த காயமடைந்த பிரபு காவல் நிலையத்தில் புகார் செய்தார். தமிழக போலீசுக்கு சற்றும் சளைக்காதபாண்டிச்சேரி போலீஸ் அந்தப் புகாரை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

இந்தப் பிரச்சனையை சட்டசபையில் அதிமுக உறுப்பினர் அன்பழகன், திமுக உறுப்பினர் சிவா ஆகியோர்கிளப்பினர். இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார்.

ஆனால், இந்தத் தாக்குதலைக் கண்டித்து இன்று சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை பத்திரிக்கையாளர்கள்ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தனர்.

பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அதிமுக ஆட்சி நடந்து ஜெயா டிவி நிருபர்தாக்கப்பட்டிருந்தால் அந்த ஊர் போலீஸ் என்ன மாதிரி நடவடிக்கை எடுத்திருக்கும் என்று நாம் சொல்லிஉங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.

இந் நேரம் அந்த காண்ட்ராக்டரை கந்தல் துணியாகியிருப்பாகள் போலீசார். காங்கிரஸ் ஆட்சி நடப்பதால்தப்பிவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X