For Daily Alerts
Just In
போலி மினரல் வாட்டர் விற்ற 2 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
சென்னை:
ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத குடிநீர் பாக்கெட்டுகளை விற்றதாக இதுவரை 2 நிறுவனங்கள் மீது நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை கூறியுனார்.
இதுகுறித்து சட்டசபையில் அவர் பேசுகையில்,
ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத குடிநீர் பாக்கெட்டுகள், கேன்களை விற்க தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறிவிற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை இரண்டு நிறுவனங்கள் மீது இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மினரல் வாட்டர் பாக்கெட்டுகளுக்கு விலை நிர்ணயம் செய்ய அரசு உத்தேசித்துள்ளது. இதுதொடர்பாக விரைவில்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் செம்மலை.
Comments
Story first published: Friday, April 19, 2002, 5:30 [IST]