இடைத் தேர்தல்: மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி - இ.கம்யூ. அறிவிப்பு
கோயம்புத்தூர்:
வரவிருக்கும் சட்டசபை இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டுபோட்டியிடுவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் கோவையில் நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு இன்று செய்தியாளர்களிடம்கட்சியின் மாநல செயலாளர் நல்லகண்ணு பேசுகையில்,
கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கு மாநில செயற்குழுவிற்கு கட்சியின் தலைமையிடம் அதிகாரம் வழங்கியுள்ளது.
சட்டசபை இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே நாங்கள் போட்டியிடவிரும்புகிறோம்.
இருப்பினும் அதற்கு முன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன்கலந்து பேசிய பின் இறுதி முடிவெடுப்போம்.
திங்களூர் காவல் நலைய தாக்குதல் மற்றும் கிராமத்து மக்கள் மீதான தாக்குதல் குறித்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்றநீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றார் நல்லகண்ணு.












Click it and Unblock the Notifications