சென்னை கோட்டையைக் கலக்கிய விஷ வாயு வதந்தி
சென்னை:
சென்னை கோட்டை வளாகத்தில் விஷ வாயு பரவியதாக எழுந்த வதந்தியையடுத்து அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது.
சென்னை கோட்டை வளாகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை ஏதோ ஒரு நெடி அடித்தது. அந்த நெடியைசுவாசித்தவர்கள் எரிச்சலாக உணர்ந்தனர்.
இதையடுத்து விஷவாயுதான் பரவி விட்டதாகச் செய்தி பரவியது. ஆனால் அது வதந்தி என்று பின்னர் தெரியவந்தது.
இதுகுறித்து சட்டசபையின் திமுக துணைத் தலைவரான துரைமுருகன் சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.துறைமுகத்தில் கந்தக வாயு கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால்தான் கோட்டை வளாகத்தில் விஷ வாயுபரவியதாக செய்தி பரவியுள்ளது. இதுகுறித்து தகவல் ஏதும் வந்துள்ளதா என்று சபையில் துரைமுருகன் கேட்டார்.
அப்போது சபையை நடத்திக் கொண்டிருந்த துணை சபாநாயகரான வரகூர் அருணாச்சலம், ""ஆமாம்.துறைமுகத்தில் ஏதோ நடந்துள்ளதாம். செய்து வந்துள்ளது. தீயணைப்பு வண்டிகள் போயிருப்பதாகத் தகவல்வந்துள்ளது"" என்றார்.












Click it and Unblock the Notifications