ரணிலுக்கு சந்திரிகா மீண்டும் அறிவுரை
கொழும்பு:
விடுதலைப்புலிகளிடம் எச்சரிக்கையாகவும் கடுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று இலங்கைப் பிரதமர்ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அந்நாட்டு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா மீண்டும் அறிவுரை கூறியுள்ளார்.
நார்வே வெளியுறவுத்துறை துணை அமைச்சரான விதார் ஹெல்கெசனை நேற்று சந்தித்த பிறகுவெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் சந்திரிகா இவ்வாறு கூறியுள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் தன்னுடைய பங்கு என்னவாக இருக்கும் என்பது குறித்து ரணிலுக்குசந்திரிகா விரைவில் எழுதுவார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையை தான் முழு மனதுடன் வரவேற்பதாகவும், இந்தப் பேச்சுவார்த்தை மூலம் இலங்கைஇனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அவ்வறிக்கையில் சந்திரிகாகூறியுள்ளார்.
அமைதிப் பேச்சுக்கான நடவடிக்கைகள் குறித்து நார்வே தூதுக் குழுவினரிடம் சந்திரிகா பேசியதாகஅவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதே தவிர, அதுகுறித்து வேறு எந்த விவரமும் அதில் குறிப்பிடப்படவில்லை.
இதற்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து சிங்களர்களின் உண்மையான மனநிலை குறித்து அறிவதற்காகசந்திரிகாவின் மக்கள் கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு இலங்கையில் புலிகள் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தால், அங்கிருக்கும் சிங்களமக்களின் நிலைமை என்னவாகுமோ என்று தான் அஞ்சுவதாக மக்கள் கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் பிரதமரானரத்னசிரி விக்கிரமநாயகே கூறினார்.
புலிகளின் கோரிக்கைகளை எல்லாம் கண்மூடித்தனமாக ரணில் ஏற்றுக் கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டியஅவர், அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் அரசைவிட புலிகளே அதிகம் லாபமடைவார்கள் என்றும் விக்கிரமநாயகேதெரிவித்தார்.












Click it and Unblock the Notifications